உக்ரைனுக்கு சுமார் ரூ.2,800 கோடி ராணுவ உதவி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

உக்ரைனுக்கு இங்கிலாந்து அரசு மேலும் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு சுமார் ரூ.2,800 கோடி ராணுவ உதவி - இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.  உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் ரஷியாவை வலியுறுத்தி வருகின்றன.

மேலும் போரில் நேரடியாக பங்கேற்காமல் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு தேவையான ராணுவம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் உக்ரைனுக்கு மேலும் ராணுவ உதவிகள் வழங்குவது குறித்து,

உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உரையாற்றினார். அப்போது பேசிய அவா், உக்ரைனுக்கு இங்கிலாந்து அரசு மேலும் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக அறிவித்தார்.