மெக்சிகோவில் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் இக்ஸ்டா-பலுகா எனும் நகரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோவில் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டின் இக்ஸ்டா-பலுகா எனும் நகரம் அருகே ஷாம்பு தயாரிப்பதற்கான மூலக்கூறுகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்கு லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த சுங்கச்சாவடியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்த ஏராளமான கார்கள் சேதமடைந்து தீப்பற்றியது. இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த பயங்கர விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்