அட இதெல்லாம் பண்ணுனா!!!! ஆரோக்கியமா இருக்கலாமா?

அட இதெல்லாம் பண்ணுனா!!!! ஆரோக்கியமா இருக்கலாமா?

சருமத்தை பாதுகாக்க
 
சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. மேலும் கண்ணுக்குத் தெரியாத வகையில் காணப்படும் தோலின் நுண் துளைகள், பருக்கள் மற்றும் கொப்புளங்கள் ஆகியவற்றால், கண்ணுக்குத் தெரியும் அளவிற்கு பெரிதாகி, அழகை கெடுக்கும் வகையில் காணப்படுகிறது. எண்ணெய் வகை சருமத்தினருக்கே, இப்பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது.
 
வெள்ளரிச்சாற்றை முகத்தில் பூசி 2 நிமிடங்கள் முதல் 3 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் கழுவலாம்.
 
நன்கு மசிக்கப்பட்ட தக்காளியுடன் சில துளி எலுமிச்சை சாறை கலந்து முகத்தில் தேய்த்து கழுவினால், சிறப்பான பலன் கிடைக்கும்.
 
ஆரஞ்சு தோல் பவுடர், பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு, அதற்கு இரண்டு பங்கு தேன் மற்றும் ஒன்றரை பங்கு அளவிற்கு தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 5 நிமிடங்கள் முதல் 7 நிமிடங்கள் வரை, வட்ட இயக்கத்தில் நன்கு தேய்த்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
 
நம் வீட்டில் உள்ள கடலை மாவு, மஞ்சள் பொடியே சருமத்தைப் பாதுகாக்க போதுமானது.
 
கோடை காலத்தை சமாளிக்க:
 
* கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்., தண்ணீர் குடிக்க வேண்டும்.
* நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம்.
* பகல் நேரங்களில் இளநீர், மோர், பழச்சாறு, எலுமிச்சைசாறு குடிக்கலாம்.
* ஐஸ்கிரீம், குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக பழச்சாறு எடுத்து கொள்ளலாம்.
* பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்.
* உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக குடிக்கலாம்.
* வாரம் இருமுறை ஆயில் பாத் எடுத்து கொள்ளலாம்.
* வெயிலில் போகு முன் சன்ஸ் கீரிம் லோஷன் அரை மணி நேரம் முன்பாக தடவி செல்லுங்கள்.
* கோடைகாலத்தில் மூன்றுவேளையும் வயிறு முட்ட சாப்பிடக்கூடாது.
* டிபன் 8 மணி, மதிய உணவு 12 மணி, மாலை சிற்றுண்டி 6 மணி, இரவு உணவு 8 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* வெயிலுக்கு ஏற்ற காட்டன் ஆடைகளை அணிந்து கொள்ளவது நல்லது.
* வெளியே செல்லும்போது குடையும், தண்ணீரும் உடன் கொண்டு செல்வது அவசியம்.
* காரம் நிறைந்த உணவு பொருள்களை தவிர்ப்பது நல்லது.
* அலுவலகத்திற்கு செல்பவர்கள் சீரகத் தண்ணீரை பருகினால் வெப்பத்தினால் ஏற்படும் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
* குளிர்ந்த நீரை குடிக்க நினைப்பவர்கள் பானையில் ஊற்றி வைத்து குடிப்பதால் உடல் நலத்திற்கு எந்த கேடும் ஏற்படுத்தாது.
* கருப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது அவசியம்.
* அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது அல்லது குறைத்து கொள்வது உடல் நலத்தை காக்கும்.