3 பரோட்டாவுக்கு ஊரைக் கூட்டி வாக்குவாதம் செய்த இளைஞர்...

வடசேரி பேருந்து நிலைய உணவகத்தில், பரோட்டா தரவில்லை என அலப்பறை செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

3 பரோட்டாவுக்கு ஊரைக் கூட்டி வாக்குவாதம் செய்த இளைஞர்...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில், இளைஞர் ஒருவர் உணவு சாப்பிட சென்றதாக தெரிகிறது.  3 பரோட்டா கேட்டு வெகுநேரம் ஆகியும் கடை ஊழியர்கள், பரோட்டா வழங்காததால் அந்த  இளைஞர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், மூன்று பரோட்டாவுக்காக இளைஞர் பொங்கி எழுவதா என்றும் சத்தம் போட வேண்டாம், பரோட்டா வாங்கிக்கொள் எனவும் கூறியுள்ளனர்.  

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத அந்த இளைஞர், இவ்வளவு நேரம் பரோட்டா தராதவர்கள், போலீசார் வந்ததும் தருவதா? என விதண்டாவாதம் செய்ததோடு, இவ்வளவு நேரம் தன்னை கத்த விட்டதால், பரோட்டாவுக்கு காசு கொடுக்க மாட்டேன் எனவும் அடம் பிடித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இளைஞனை சமாதானப்படுத்திய காவலர்கள், பரோட்டா வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர்.