குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறு... குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்!!!

குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறு... குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்!!!

கோவை அருகே, குப்பை கொட்டுவதில் இரு தரப்பிப்பினருக்கு தகராறு ஏற்பட்டதில், பெண்கள் கட்டிப்புரண்டு சண்டையிட்டுள்ளனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சேரன் நகர் பகுதியில், ஜூன் பிரிட்டோ என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவரது எதிர் வீட்டில், விஜயகுமார் என்பவர் மனைவி வசுமதியுடன் வசித்து வருகிறார்.

இந்த இருவரின் வீட்டின் இடையே ஒரு காலி இடம் உள்ளதாக தெரிகிறது. அவ்விடத்தில், குப்பை கொட்டுவதில் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனைகள் மற்றும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை, விஜயகுமார் மற்றும் வசுமதி இருவரும், ஜூன் பிரிட்டோ வீட்டின் முன் குப்பையை அள்ளிக் காட்டியுள்ளனர். இதில், ஜூன் பிரிட்டோவின் வீட்டு பெண்கள் பொங்கி எழுந்து பதிலுக்கு குப்பையை அல்லி விஜயகுமார் வீட்டின் முன் காட்டியுள்ளனர்.

இதில் ஆத்திரம் தலைக்கேறிய விஜயகுமார் மற்றும் வசுமதி, ஜூன் பிரிட்டோவின் வீட்டினுள் சென்று, முதலில் ஒரு பெண்ணை தலை முடியை பிடித்து வெளியே இழுத்து வந்து, தூக்கி வீசி அடித்தனர். இதைக் கண்ட மற்ற இரு பெண்மணிகள், உள்ளே இருந்து குடத்தை தூக்கி வீசி விஜய குமாரை தாக்கினர். வெளியே வரும் பொழுது, பெரிய தாம்பூல தட்டு மற்றும் வாலி மூடியை தற்காப்புக்காக கேடயமாக பயன்படுத்தியுள்ளார்கள்.

மற்ற மூன்று பெண்களிடம் வசமாக சிக்கிக்கொண்டார் வசுமதி. தொடர்ந்து இடைவிடாமல், ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும் பொழுது, அவ்வப்போது விஜயகுமார் கையில் வைத்திருந்த விளக்கமாருடன் (துடைப்பம்) என்ட்ரி கொடுத்து, மனைவி வசுமதிக்கு உதயுள்ளார்.

ஒரு வழியாக சண்டை முடிந்ததும், மீண்டும் வீட்டு வாசலை பெருக்கத் தொடங்கினார், விஜய குமார்.

இதில் பாதிக்கப்பட்ட ஜூன் பிரிட்டோ குடும்பத்தினர், விஜயகுமார் மற்றும் வசுமதியின் பேரில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து, நடந்த சம்பவம் எல்லாம் சிசிடிவியில் பதிவான நிலையில், அவற்றை வைத்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: 10ம் வகுப்பு படிக்கும் போது அடித்த ஆசிரியர்... பதிலுக்கு கல்லூரி பருவத்தில் தாக்கிய மாணவர்!!