மாத்திரை பாக்ஸ் வடிவில் திருமண வரவேற்பு அழைப்பிதழ்...! சமூக வலைத்தளங்களில் வைரல்...!

மாத்திரை பாக்ஸ் வடிவில் திருமண  வரவேற்பு அழைப்பிதழ்...! சமூக வலைத்தளங்களில் வைரல்...!

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரின் மகள் காயத்ரி. இவர் பார்மசிஸ்ட் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு  கன்னிமாரா நூலகத்தில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் பார்மசிஸ்ட்டான விஸ்வநாதனுக்கும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தர்மபுரியில் திருமணம் நடைபெற உள்ளது. மேலும் இவர்களது திருமண வரவேற்பு விழா,  சென்னை வெப்பேரியில் உள்ள ஒய் எம் சி ஏ அரங்கில் நடைபெறுகிறது.

இந்நிலையில் மணப்பெண் காயத்ரி தனது திருமணத்தின் அழைப்பிதழ் வித்தியாசமாகவும், அனைவராலும் கவரப்பட வேண்டும் எனவும் எண்ணி, தனது வரவேற்பு பத்திரிக்கையை மாத்திரைகள் உள்ள பாக்ஸ் வடிவில் அச்சிட்டு உள்ளார். 

அந்த மாத்திரை பாக்சில் அனைத்து பகுதிகளிலும் தங்களது திருமணம் மற்றும் வரவேற்பு தொடர்பான விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்தது மட்டுமின்றி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது.