நீர் தேக்கத்தை கடக்க முயலும் யானைக் கூட்டத்தின் பரிதாப வீடியோ இணையத்தில் வைரல்!!..
நீர் தேக்கத்தை கடக்க முயலும் யானைக் கூட்டத்தின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுதொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் யானைகள் கூட்டம் ஒன்று கர்நாடக காட்டுப்பகுதியில் சுற்றும் போது ஒரு நீர் தேக்கத்தை கடக்க முடியாமல் தவித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த யானைகளை அதற்கு பின்பு கர்நாடக வனத்துறை அதிகாரிகள் பத்திரமாக அங்கு இருந்து மீட்டு வனத்திற்குள் விட்டதாக கூறப்படுகிறது.
Later they were rescued by Karnataka FD. But see how difficult it is !! pic.twitter.com/v6EWtq4DYE
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) January 10, 2022
இந்தப் பதிவை செய்திருந்த வனத்துறை அதிகாரி மற்றொரு பதிவை செய்துள்ளார். அதில், 'இந்த 5 யானைகளும் நீர் தேக்கத்திற்குள் தெரியாமல் விழுந்துள்ளன. ஆகவே நாம் காட்டுப்பகுதிகளில் இருக்கும் கட்டமைப்பை வன விலங்குகளுக்கு ஏற்றவாறு அமைக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.அவரின் இந்தப் பதிவை பலரும் பார்த்து தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.