அரசியல் ஊர்வலத்தில் வெறுக்கத்தக்க வகையில் கோஷம் எழுப்பிய சிறுவன் - 2 பேர் மீது வழக்குப்பதிவு!
கேரளாவில் அரசியல் ஊர்வலத்தில் வெறுக்கதக்க கோஷம் எழுப்பிய சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆழப்புழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட அரசியல் ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவன் ஒருவன் பிற மதத்தவர்கள் குறித்து வெறுக்கதக்க வகையில் கோஷங்கள் எழுப்பிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து வேதனை தெரிவித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி, அறியாத வயதில் சிறுவர்களின் மனதில் வெறுப்புணர்வை விதைக்கும் விதமாக மதம் மற்றும் அரசியல் கூட்டங்களில் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஆலப்புழா மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் நவாஸ் வந்தனம் உள்ளிட்ட 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.