நாசுக்கா ஓடிப்போன இளைஞர்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

பேக்கரியில், பொருட்களை வாங்கி விட்டு, நாசுக்காக யாருக்கும் தெரியாமல் வெளியேறிய ஒரு இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது.

நாசுக்கா ஓடிப்போன இளைஞர்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்!

திருடனாய் பார்த்து திருந்தா விடில், திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழமொழி. அது போல தான் இங்கு நட்ஃபந்திருக்கிறது. தாம்பரம் அருகே பேக்கரியில், சாப்பிட்ட பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் நாசுக்காக நழுவிய ஒரு இளைஞரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

முடிச்சூர் சாலை பழைய பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே கணபதி பேக்கரி கடையை நடத்தி வருபவர் பெருமாள். இவர் பேக்கரி கடைக்கு பிரபல தனியார் உணவு டெலிவரி செய்யும் Zomato நிறுவனத்தின் உடையில் இளைஞர் ஒருவர் கடைக்கு வந்து, பப்ஸ் உட்பட பொருட்களை வாங்கி சாப்பிட்டார். பின், கடையில் இருந்த பிரிட்ஜை திறந்து  தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை குடித்து விட்டு, சிறிது நேரம் கடையில் காத்திருந்தார். கடையில் கூட்டம் அதிகமான உடன் அங்கிருந்து நைசாக சாப்பிட்ட பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது அந்த இளைஞர் கடையிலிருந்து நைசாக வெளியேறும் வீடியோ பதிவாகி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ வெளியாகி தர்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.