"அன்னபூரணி அம்மாவ பகைச்சானுவ.. சென்னையவே சிதைச்சிட்டு".. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...

கடவுள் அவதாரம் என கூறப்படும் அன்னபூரணியை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்...

"அன்னபூரணி அம்மாவ பகைச்சானுவ.. சென்னையவே சிதைச்சிட்டு".. பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...

தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி ஒரு கடவுளும், அந்த கடவுளின் அவதாரமும் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றன. ஏற்கனவே நித்யானந்தா தான் ஒரு சிவனின் அவதாரம் எனக் கூறி, கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி இளைஞர்களை கவர்ந்து வரும்  வேளையில், இந்த திடீர் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறிகொள்ளும் பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் உள்ளது புகழ்பெற்ற ஆதிரபாரசக்தி கோயில். இங்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வதும், ஆண்டு தோறும் பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரை செல்வதும் வழக்கம். இந்த நிலையில், தான் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி ஒரு பெண்ணிற்கு நடத்தப்படும் பூஜைகளும், போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிபராசக்தி அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கை ஒன்றில் அமர்ந்து அருள் வழங்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. பல மாலைகளை அணிந்து, கடவுள் அலங்காரத்தோடு, பின்னணியில் பாடல்கள் ஒலிக்க அங்கு வந்த பக்தர்களுக்கு அந்த பெண்மணி அருள் வழங்கி வருகிறார். 

அண்ணப்பூரணி என்ற இயற்பெயரை கொண்ட அந்தப் பெண்மணி, பல வருடங்களாகவே இவ்வாறு பொதுமக்களுக்கு அருள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இப்போது தான் வெளியே இது தெரிய வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பொழுது அவர் டிரெண்டாக காரணமும், அம்மா மனது வைத்ததால்தான் என அவரது பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர் எப்படி ஆதிபராசக்தியின் அவதாரம் ஆனார், அவரது விவரம் என்பதை மட்டும் ரகசியமாக காத்து வருகின்றனர்.

இந்நிலையில், இவரை பல தனியார் சேனல்கள் பேட்டி எடுத்த போது அந்த பேட்டியில் எனக்குள் இருக்கும் சக்தியை புரிந்து கொள்ளாமல் என்னை அவமானப்படுத்த முயற்சிக்கிறீர்கள்... என்னை அவமானப்படுத்துவதாலோ, என்னை புகழ்வதாலோ, எனக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாது. "என்னை சாதாரணமா நினைச்சிட்டு இருக்கீங்க இல்லே?" என்று மிரட்டினார்.. அப்போது அன்னபூரணி மூச்சு வாங்கி கொண்டே மிரட்டிய வீடியோக்கள் இணையத்தில் பரபரப்புடன் ஷேர் செய்யப்பட்டது.. அன்றைய தினமே அந்த வீடியோவை வைத்து மீம்ஸ்களும் வெளியாகின..

இந்நிலையில் தற்போது சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால்.. மக்கள் இயல்பு வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இந்த நேரத்திலும், அன்னபூரணியின் வீடியோவை வைத்து மீம்ஸ்களை தயார் செய்துவிட்டனர் நம் நெட்டிசன்கள்.. அதில் ஒரு மீமில், வடிவேலு மருத்துவமனையில் அட்மிட் ஆகி சீரியஸ் கண்டிஷனில் படுத்துள்ளார்.. இந்த போட்டோவை பதிவிட்டு, "அன்னபூரணி அம்மாவ பகைச்சானுவ.. சென்னையவே சிதைச்சிட்டு".. என்று கேப்ஷன் போட்டுள்ளனர்..

இந்த மீம்ஸ்களை பார்த்த நெட்டிசன்களும், "நினைச்சேன்.. அன்னப்பூரணி அன்னைக்கே மிரட்டுச்சு.. என்னை யாரும் சாதாரணமா எடுத்துக்க வேணாம்னு சொல்லி மிரட்டிச்சே.. அதான் இப்படியாகிடுச்சி.. அன்னப்பூரணியை பகைச்சிக்க வேணாம்னு சொன்னா கேட்டீங்களா? இப்ப பாருங்க, சென்னையே மூழ்குற அளவுக்கு போயிடுச்சு.." என்று பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.