நான்கு முறை தடுப்பூசி செலுத்திய பெண்ணிற்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா...

வெவ்வேறு தடுப்பூசிகளில் 4 டோஸ் செலுத்திகொண்ட பெண்ணிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நான்கு முறை தடுப்பூசி செலுத்திய பெண்ணிற்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா...

துபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னதாக 30 வயதான பெண் ஒருவர் இந்தியா வந்துள்ளார்.அவர் மத்தியபிரதேச மாநிலத்தில் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டின் திருமண விழாவிற்காக இந்தியா வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அந்த பெண் ஆனவர் ஏற்கனவே இரு நாடுகளில் இருந்து வெவ்வேறு வகையான கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.ஜனவரி மாதம் முத;ல் ஆகஸ்ட் மாதம் வரையிலான இடைவெளியில் அந்த பெண் சீன தயாரிப்பான சினோபாம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும்  பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மஹவ் நகரில் திருமண நிகழச்சியில் பங்கேற்றுவிட்டு இந்தூரில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்ல அந்த பெண் திட்டமிட்டிருந்தார். இதற்காக, பயண நாளான நேற்று அந்த பெண் இந்தூர் விமான நிலையம் வந்தார். விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

அந்த பரிசோதனையில் 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அந்த 30 வயது நிரம்பிய பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபப்ட்டது. இதையடுத்து, அந்த பெண்ணின் விமானப்பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.