சொத்து தகராறில் அடித்துக்கொண்டு அண்ணன் தங்கை குடும்பம்...! வீடியோ வைரல்...!

சொத்து தகராறில் அடித்துக்கொண்டு அண்ணன் தங்கை குடும்பம்...! வீடியோ வைரல்...!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்துள்ள செம்டாம்பாளையம் கணபதி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவருக்கு சொந்தமாக 11 சென்ட் நிலம் இருந்துள்ளது. இதில் 5 1/2 சென்ட் நிலத்தை பாப்பாத்தியின் பெயருக்கு அவரது அப்பா கோவிந்தராஜ் இறப்பதற்கு முன்பாக எழுதி வைத்துள்ளார். இந்த நிலையில் மீதமுள்ள நிலத்தை பிரித்துக் கொள்வதில் அண்ணன், தங்கை இருவருக்குள் தொடர்ந்து பிரச்சனை நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை பாப்பாத்தி (50) அவரது மகள் நந்தினி (30) மற்றும் அவரது அண்ணன் செல்வம் (55) மற்றும் அவரது மனைவி தவமணி (52) உள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினருக்கும் இடையே காலை வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகளைப்பாக மாறி இரு குடும்பத்தினரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.