பீஸ்ட் படபிடிப்பு: சென்னை வந்தார் நடிகை பூஜா ஹெக்டே!

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் இன்று தொடங்கிய நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்தார்.

பீஸ்ட் படபிடிப்பு: சென்னை வந்தார் நடிகை பூஜா ஹெக்டே!

விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் சென்னையில் இன்று தொடங்கிய நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்தார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக சென்னையில் அரங்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் கொரோனா 2-வது அலையின் தீவிரத்தால் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் குறைந்து படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு அரங்கு ஒன்றில் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்கியது. இதையொட்டி பீஸ்ட் படப்பிடிப்பிற்காக  நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்தார்.