இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு...நிம்மதி பெருமூச்சில் மக்கள்..!

இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு...நிம்மதி பெருமூச்சில் மக்கள்..!

கரடிகள் நடமாட்டம்:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிலும் குறிப்பாக கரடிகளின் நடமாட்டமானது அதிகரித்து காணப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கரடியை பிடிக்குமாறு வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

கரடியை பிடிக்க திட்டம்:

மக்களின் கோரிக்கையை அடுத்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உயிலட்டி கிராமத்தில் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். அப்போது இரண்டு கரடிகளில் ஒன்று மட்டும் கூண்டில் சிக்கியது. ஒன்று சிக்காமல் தப்பி சென்று சுற்றுவட்டார பகுதிகளில் உலா வந்து கொண்டிருந்தது.  

சிக்கிய கரடி:

இந்நிலையில் கரடியை பிடிப்பதற்கு கூக்கல் கிராமத்தில்  மீண்டும் வனத்துறையினர் கூண்டு வைத்தனர். முதலில் கூண்டில் சிக்காமல் தப்பித்துக்கொண்டு இருந்த கரடி ஒன்று இந்த முறை விடியற்காலையிலேயே சிக்கியது. கூண்டில் சிக்கிய கரடியை வனத்துறையினர் அலேக்காக தூக்கிக்கொண்டு முதுமலை பகுதியில் உள்ள காட்டில் விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.