"CBI, ED, IT சோதனைக்கெல்லாம் பயப்பட போவதில்லை" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

"CBI, ED, IT சோதனைக்கெல்லாம் பயப்பட போவதில்லை" அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பத்தூரில் நடந்த விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்," மத்திய புலனாய்வு துறை, லஞ்ச ஒழிப்புதுறை, அமலாக்கதுறை சோதனைக்கெல்லாம் பயப்பட போவதில்லை" என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடைசி நிகழ்ச்சியாக திருப்பத்தூர் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திமுக கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, திமுகவை சேர்ந்த 200 மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியை வழங்கியுள்ளார்.

அப்பொழுது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "இங்குள்ள பெரியோர்களை பார்க்கும் போது கலைஞரை பார்ப்பது போல் தெரிகிறது. இன்று தமிழகத்தில் திமுக ஆட்சிசெய்வதற்கு முக்கிய காரணம் நீங்கள் தான். தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கதுறையினர் சோதனை மேற்க்கொண்டு வருகின்றனர். மிசாவை பார்த்தவர்கள் திமுகவினர். இந்த ஈடி சோதனைக்கெல்லாம் பயப்படமாட்டோம்" என்று பேசியுள்ளார்.

மேலும், "1975 ஆம் ஆண்டு கோபாலபுரத்தில் கலைஞர் தங்கியுள்ள வீட்டை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வீட்டை அளக்கவேண்டும் என கூறிய போது உங்களை இங்கு அனுப்பியவர் எம்ஜிஆர் தான் அவருக்கு தெரியாத நான் இந்த வீட்டை 1956லேயே வாங்கிவிட்டேன் என்று கூறி சோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கு டீ போட சொல்லிவிட்டு முரசொலி மாறன் வீட்டிற்கு சென்று கழக உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதியவர் தான் கலைஞர்", என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க || சதுரகிரி மலையில் காட்டு தீயில் சிக்கித் தவித்த பக்தர்கள்!

மேலும், "ஏராளமான சோதனைகளை பார்த்தவர்கள் திமுகவினர் இந்த சிபிஐ, ஈடி, ஐடி எல்லாம் எம்மாத்திரம்", எனவும் கூறியுள்ளார். அதே போல், "முன்னாள் அதிமுக  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, வேலுமணி ஆகியரது வீட்டில் அதிகாரிகள்  சோதனை மேற்க்கொண்டனர் ஆனால் இதுவரையில் ஒன்றிய பாஜக அரசு அவர்கள் மீது  எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனவும் க்குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், " பிஎம் கேஸ் என்ற பெயரில் கொரோனா காலகட்டத்தில் வசூல் செய்த 32 ஆயிரம் கோடியிற்கு ஒன்றிய மோடி அரசு இதுவரையில் கணக்குகாட்ட வில்லை. கொரோனா பெயரை சொல்லி கொள்ளையடித்தவர்கள் பாசிச பாஜகவினர். ஆனால் எங்கள் முதல்வர், மோடியை போன்றவர் அல்ல. சட்டமன்றத்தில் கொரோனா காலத்தில் வசூலான நிதியிற்கு வெள்ளையறிக்கை வெளியிட்டு அனைத்தையும் வெளிப்படையாக சொன்னவர் நம் முதல்வர்" என்றும் பேசியுள்ளார்.

மேலும்,"மீண்டும் பாஜக ஆட்சியமைத்தால் இந்தியாவை காப்பற்ற முடியாது, அதனை எதிர்க்கவே பெங்களூரில் 24 கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன" ராணாவும் தெரிவித்துள்ளார்.
  
இதையும் படிக்க || "காமராஜர் ஆட்சியை பாமக தான் கொண்டு வரும்" அன்புமணி ராமதாஸ் பேச்சு!