அடடா.. இது சூப்பரா இருக்கே.. கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு எனர்ஜி பூஸ்டர்!! எங்க தெரியுமா?

நாகர்கோவிலில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில், போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. 

அடடா.. இது சூப்பரா இருக்கே.. கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு  எனர்ஜி பூஸ்டர்!! எங்க தெரியுமா?

கோடை வெயின்போது, பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசார், வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், அவர்களுக்கு மோர், இளநீர், குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசாருக்கு, குளிர்பானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், பத்ரி நாராயணன் பங்கேற்று, மோர், தர்பூசணி, குளிர்பானம் உள்ளிட்டவற்றை வழங்கினார். மாவட்டம் முழுவதும் பணியில் உள்ள போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானங்கள் வழங்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.