முதலமைச்சர் நாளை டிஸ்சார்ஜ்....

முதலமைச்சர் நாளை டிஸ்சார்ஜ்....

கோவிட்-19 க்கு சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் தேறி வருவதாகவும், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும் ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வில் இருக்குமாறும் தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் நோய்த்தொற்றில் இருந்து நன்றாக குணமடைந்துவிட்டார் எனவும் மேலும் அவர் நாளை (திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு அவர் வீட்டில் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார் என்றும் முதலமைச்சர் சிகிச்சை பெற்று வரும்  மருத்துவமனை இன்று வெளியிட்ட மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 12-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்,  மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் கண்காணிப்புக்காக வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.