விவசாயிகள் சங்கம் சார்பில் இலவச மண்வெட்டி வழங்கும் விழா!!

விவசாயிகள் சங்கம் சார்பில் இலவச மண்வெட்டி வழங்கும் விழா!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில்  விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது

மண்வெட்டி வழங்கினர்

 இலவச மண்வெட்டி மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு, விவசாய தமிழர் விழிப்புணர்வு நலச்சங்க மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக, ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் கலந்து கொண்டு இலவச மண்வெட்டி மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி பேசினார்.

விதைகள் வழங்கலாம்

அவர் பேசியதாவது, விவசாய சங்கம் நடத்தும்  கூட்டத்தில், சால்வைகள்,பரிசு மாலைகள், கேடயஙள் போன்றவை வழங்காமல், விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள்,மரக்கன்றுகள் போன்றவற்றை வழங்கினால்,விவசாயத்தை மேம்படுத்த  உதவியாக இருக்கும் என்று கூறினார்.இச்சங்கத்தின் நிர்வாகிகள் விவசாயிகளுக்கு மண்வெட்டி வழங்கி  சிறப்புரையாற்றினர்.இந்நிகழ்வில் ஊத்தங்கரை  பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்,