சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் மூலப்பெருட்கள் வெடித்து சிதறியதில் வீடு தரைமட்டம்...

சிவகாசியில் வீட்டின் தரைத்தளத்தில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் மூலப்பெருட்கள் வெடித்து சிதறியதில் வீடு தரைமட்டமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கும் மூலப்பெருட்கள் வெடித்து சிதறியதில் வீடு  தரைமட்டம்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அடுத்த மேற்கு நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவருக்கு சொந்தமான இரண்டு அடுக்கு வீட்டின் தரைத்தளத்தில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசு குழாய் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில் பட்டாசு தயாரிக்கும் மூலப்பெருட்களில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இதனால் வீட்டில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. மேலும் வீடு தரைமட்டமான நிலையில், தரைத்தளத்தில் பணிபுரிந்திருந்த வேல்முருகன் மற்றும் மனோஜ்குமார் ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டே இருந்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக  காட்சி  அளித்தது. 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் வீட்டில் உள்ளவர்களின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலம் இடிந்து விழுந்த கட்டிடத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.  இரவு நேரம் என்பதால் பணிகள் நிறுத்தப்பட்டு, மீண்டும் இன்ற காலை முதல் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.