கள்ளக்குறிச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம்...முழு விவரங்கள்!

இதன்படி அரசு நினைத்தால் ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கலாம்.

கள்ளக்குறிச்சி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது குண்டர் சட்டம்...முழு விவரங்கள்!

சின்னசேலம் தனியார் பள்ளி கலவர வழக்கில், மேலும் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவர வழக்கில், பள்ளி பேருந்துக்கு தீ வைத்தது, போலீஸ் வாகனம் உடைத்து சேதப்படுத்தியது, பள்ளி மாணவர்கள் சான்று மற்றும் அலுவலக கோப்புகளுக்கு தீவைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் தொடர்புடையதாக மணி, சரண்ராஜ், லட்சாதிபதி, சர்புதீன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.