மதுராந்தகம் அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

மதுராந்தகம் அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

மதுராந்தகம் அருகே சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளாகியதில், ஓட்டுநர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் தென் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கணக்கான தனியார் பேருந்துகள் அதிக அளவில் காலை நேரங்களில் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் இன்று காலை தென்காசியில் இருந்து சென்னை நோக்கி 30 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மதுராந்தகம் புறவழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்த பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.  

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து, சாலை ஓரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக பேருந்தில் இயக்கிய ஓட்டுனர் உட்பட்ட இருவருக்கு காயம் ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் சேதம் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து , தகவல் அறிந்து,  சம்பவ இடத்திற்கு விரைந்து மதுராந்தகம் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க || பயபக்தியுடன் சாமி கும்பிட்டுவிட்டு, திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமி!