இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மை காக்குமா பனை மரம்?

இயற்கைச் சீற்றங்களில் இருந்து நம்மை காக்குமா பனை மரம்?

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த  பிரதாபராமபுரம் ஊராட்சியானது.

அரணாக பனை மரம்

இது 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி  மற்றும் 2018 ஆம் ஆண்டு வீசிய கஜாபுயல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்த கடலோர கிராமம்  தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை தடுக்கும் வகையில்  இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை விதைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பனை விதை நடப்பட்டது

அதன்படி கடந்த 2ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார். செருதூர் கடற்கரையிலிருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு பனை விதை நடப்பட்டது இதன் மூலம் கிராமத்தை பெரிய அளவிலான பாதிப்பிலிருந்து காக்க முடியும் என அவர் தெரிவித்தனர்