எல்.ஐ.சி. முகவர்கள் போராட்டம்!

எல்.ஐ.சி. முகவர்கள் போராட்டம்!

எல்.ஐ.சி. முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை (ஐஆர்டிஏஐ) கைவிட கோரி நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:

இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமை, எல்.ஐ.சி. முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் எல்ஐசி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முகவர்களின் கமிஷன் குறைப்பு முன்மொழிவை கைவிட கோரியும், எல்ஐசியை தனியார் மையமாக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் நாகை திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட எல்ஐசி முகவர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.