பிரதமர் பேசும் பொது காலியான இருக்கைகள்...!!

பிரதமர் பேசும் பொது காலியான இருக்கைகள்...!!

பல்லாவரத்தில் நடைபெற்ற நலத்திட்ட தொடக்க நிகழ்ச்சியில் முதலமச்சர் ஸ்டாலின் பேசி முடித்த நிலையில், பிரதமர் மோடியின் உரையை கேட்காமல்  அங்கிருந்த திமுகவினர் மைதானத்தை விட்டு வெளியேறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பல்லாவரத்தில் தாம்பரம் - செங்கோட்டை இடையேயான ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி பல்லாவரம் இங்கிலீஷ் எலக்ட்ரிக்கல் கம்பெனி மைதானத்தில் தடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்நிலையில் மேடையில் முதல்வர் பேசி முடித்த நிலையில் கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான திமுகவினர் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அப்போது "நாங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவதை  கேட்கவே வந்ததோம் மோடியின் உரையை கேட்க அல்ல" என கூறியபடி சென்றனர்.

இதனால் கூட்ட அரங்கில் போடப்பட்டிருந்த இருக்கைகள் பெரும்பாலானவை பிரதமர் மோடி பேசும்போது காலியானது. மேலும் காலதாமதமாக வந்த பாஜகவினர் கூட்டம் அரங்கிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பிரதமர் பேசும்போது அரங்கமானது வெறிச்சோடி காணப்பட்டது.