மதுரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்...அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

மதுரையில் புதிய ஜல்லிக்கட்டு மைதானம்...அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!

மதுரை அலங்காநல்லூர் அருகே 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு அரங்க பணிகள் நடைபெற்று வருவதை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44  கோடி மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு அரங்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து எ.வ.வேலு பேசியதாவது, 17.12. 2023 க்குள் ஜல்லிகட்டு அரங்கபணிகள் முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தற்போது அரங்க பணிகள் 35 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டு அரங்கத்தில் நுழைவு வாயில் வளைவு, காளை சிலை, செயற்கை நீருற்று, 50ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட உள்ளது, என தெரிவித்துள்ளார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வந்து செல்ல 22 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும். இதற்காக தனியார் இடங்களை வாங்க வேண்டிய நிலை உள்ளது. அதை விரைந்து நிலத்தை கையகப்படுத்த கூறியுள்ளேன், எனவும் கூறியுள்ளார்.

காளைக்கு மூக்கானங்கயிறு எப்படி முக்கியமோ அதுபோல எதிர்க்கட்சி ஆலோசனைகள் அரசுக்கு மிகவும் முக்கியம். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் பீதியை தவறான கருத்துக்களை பரப்புகின்றன, என எதிர்க்கட்சிகள் மீது சாடியுள்ளார்.

மேலும், பேணா சிலை குறித்து பேசுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் முதலமைச்சர் ஆலோசித்து தீர்ப்பை பொறுத்து பேனா நினைவு சின்னம் பணிகளை தொடங்க முடிவு செய்வார் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: "மாணவர்கள், மாநிலத்தின் பிராண்ட் அம்பாசிடராக விளங்க வேண்டும்", அமைச்சர் உதயநிதி பேச்சு!