ஜெயகுமார் மீதான நில அபகரிப்பு புகார்...நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ஜெயகுமார் மீதான நில அபகரிப்பு புகார்...நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

நில அபகரிப்பு புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை துரைப்பாக்கத்தில் மீன் வலை உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மீது மகேஷ் என்பவர் புகார் அளித்தார்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் மருமகன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில் தனது மருமகனின் சகோதரர் மகேஷ் அளித்த புகாரை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன் குமார் மீது பதியபட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.