கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் குறையாத சுற்றுலா பயணிகளின் கூட்டம் வார விடுமுறையை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்துள்ளனர். இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வந்த சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்து ஏரியில் படகு சவாரி செய்தும் பிரையண்ட்  பூங்காவில் மலர்களை கண்டு ரசித்தனர் . மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம் , குணா குகை , பைன் மர  காடுகள் , தூண்பாறை ஆகிய இடங்களில் செல்பி புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர் .சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமாக இருந்து வருவதால் உள்ளூர் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.