என்னமா அடிச்சிருக்காங்க.. அரசு பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்.. நீங்களே பாருங்க!!

கன்னியாகுமரி மாவட்டம் சூரங்குடியில், பள்ளி மாணவனை கடுமையாக தாக்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

என்னமா அடிச்சிருக்காங்க.. அரசு பள்ளி ஆசிரியரின் கொடூர செயல்.. நீங்களே பாருங்க!!

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே சூரங்குடி எனும் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்..

கடுமையாக தாக்கிய ஆசிரியர்:

ஒரு பாடத்திற்கான நோட்டு புத்தகத்தை கொண்டு செல்ல வில்லை என கோபமடைந்த ஆசிரியர் மோகன் மாணவனை பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் உடலின் பல பகுதிகளில் காயத்தோடு வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

வைரலான வீடியோ:

மாணவனின் பெற்றோர்கள் தனது மகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று மகனின் உடலில் இருந்த காயங்களை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். காயத்துடன் காணப்பட்ட மாணவனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காண்போரை நெஞ்சுறுக்க செய்யும் வகையில் அமைந்தது. 

காவல் நிலையத்தில் புகார்:

இவ்விவகாரம் அப்பகுதியில் சூடு பிடிக்க துவங்கியதால், அப்பகுதி மக்கள் அளித்த ஆலோசனையின்படி, பெற்றோர் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தவறு செய்தால் தண்டனை அளிப்பது என்ற பெயரில் தனது கோபாவேசத்தை தீர்க்கும் அளவுக்கு மாணவனை பிரம்பால் காட்டுமிராண்டித்தனமாக ஆசிரியர் தாக்கியிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

பணியிடை நீக்கம்:

இந்நிலையில் ஆசிரியர் மோகனை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.