ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை!!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்  27 பதக்கங்கள் பெற்ற தமிழ்நாட்டு வீரர்களுக்கு  ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற தொழில் நிறுவனங்கள் கூட்டுறவு கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், "சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்றுள்ளது. இதில் 27 பதக்கங்கள் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும்" எனத் அறிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பேரா ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு தகுதியான ஊக்கத் தொகையும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது இது தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் வழங்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விளையாட்டு துறையில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள 3 சதவிகித வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.