நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் மாயமான 23 நாகை மீனவர்கள் வீடு திரும்பினர் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு

நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில்  மாயமான 23  நாகை மீனவர்கள் வீடு திரும்பினர் - உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு

கேரளா அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் மாயமான நிலையில், 23 பேர் நாகை வந்தடைந்தனர்.

நாகை அடுத்துள்ள சாமந்தான்பேட்டையை சேர்ந்த 9 மீனவர்களும் மற்றும் ஆரிய நாட்டு  தெருவை சேர்ந்த 23 மீனவர்ளும் மூன்று படகுகளில் கடந்த வாரம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்தனர். இந்நிலையில் புயல் காரணமாக, நிலை தடுமாறிய படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரு படகில் இருந்த ஒன்பது மீனவர்கள் கடலில் மூழ்கி மாயமான நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாயமான மீனவர்களுடன் சென்ற 23 மீனவர்களும் இரண்டு படகுகளில் நாகை துறைமுகத்தை வந்து சேர்ந்தனர்.