வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்- துரை வைகோ ஆவேசம்

இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர்.

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்- துரை வைகோ ஆவேசம்

இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம் என மதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் துரை.வைகோ கூறியுள்ளார்.

நான் வைகோ போல அல்ல

என்றும் உழைப்பிற்கும் விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை. வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாமனிதர் ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மதிமுக தலைமை நிலைய பொதுச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

ஆவணப்படம் திரையிடல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திரையரங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த மாமனிதன் ‌ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை மதிமுக தலைமை நிலைய பொது செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத் திரைப்படத்தை பார்த்தனர்.

பின்னர் நிர்வாகிகள் ,தொண்டர்கள் மத்தியில் துரை வைகோ பேசுகையில் இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் தலைவருக்கே ,(வைகோ) தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது. பழையபடி இழந்ததை மீட்க வேண்டும் வரலாறு படைக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.


உழைப்பவர்களுக்கு மட்டுமே…

நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன் இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்று. இழந்ததை மீட்போம் வரலாறு படைப்போம். அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தொண்டர்கள் நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர்.

இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர். இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது வெளியே செல்லலாம் என்றும், உழைப்பிற்கும் விசுவாசத்திற்கு மட்டும் தான் மரியாதை. வைகோ மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான் என்றார். -