அதிமுக அலுவலக மோதல் வழக்கு…சி.வி.சண்முகம் கூடுதல் மனு!

அதிமுக அலுவலக மோதல் வழக்கு…சி.வி.சண்முகம் கூடுதல் மனு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ஆம் நாள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கிக்கொண்டனர்.

பழனிச்சாமி தரப்பினர் புகார்

இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 47 பேர் காயமடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உள்பட 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அதிமுக அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சி. வி.சண்முகம் கூடுதலாக மனு தாக்கல்

அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அண்மையில் தெரி வித்தது. இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

சி. வி.சண்முகம் தாக்கல் செய்துள்ள மனு வில், அதிமுக அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்க வில்லை.

அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தர விட வேண்டும். காவல்துறை இயக்குநர் உத்தர விட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தர விட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.