குழந்தை திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளை உள்பட 5 பேர் கைது.!

குழந்தை திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளை  உள்பட 5 பேர் கைது.!

தர்மபுரி அருகே குழந்தை திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளை மற்றும் பெற்றோர்கள் உள்பட 5 பேர் கைது.

தர்மபுரி அருகே குழந்தை திருமணம் செய்யமுயன்ற மாப்பிள்ளை, பெற்றோர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். குப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மகன் சர்ச்சின். கட்டிட மேஸ்திரியான இவருக்கும் நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் கே.பி. நகரைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் 17 வயது மாணவிக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று தர்மபுரி அடுத்த தொப்பூர் மாரியம்மன் கோயிலில் இருவருக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலர் ஜோதிமணி நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.இதனை தொடர்ந்து குழந்தை திருமணம் செய்ய முயற்சித்த மாப்பிள்ளை சச்சின் மற்றும் மாப்பிள்ளையின் தந்தை மணி, தாய் வள்ளி, சிறுமியின் தந்தை புவனேஸ்வரன், தாய் கிருஷ்ணவேணி ஆகிய 5 பேர் மீதும் தர்மபுரி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.