சென்னையில் 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு...!

சென்னையில் 11 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு...!

15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தை தொழிலாளர்களை சென்னை மாவட்ட குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

சென்னை பூக்கடை குடோன்களில் அதிகப்படியான குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படிக்க : அத்துமீறலை அடக்கிய தீர்மானம் - முரசொலி!

இதன் அடிப்படையில் அதிகாரிகள் மண்ணடி பகுதி முழுவதும் திடீரென சோதனை மேற்கொண்டனர். இதில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்த்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து  11 குழந்தை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர்.

குழந்தை தொழிலாளர்களை வைத்து பணியாற்றிய உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.