இமானுவேல் சேகரன் நினைவிடத்தில்  அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார்!

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில்  அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார்!

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதய குமார். தலைமையில் இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில்  மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சட்டமன்றத்தில் இமானுவேல் சேகரன் விழாவை அரசு விழாவாக அறிவிப்பதற்கு வலியுறுத்துவோம். திமுக ஆட்சியில் மின் கட்டணம் பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான விலைகளை உயர்த்தி  விட்டது தான் சாதனை என அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோர் மதிப்பதில்லை.பின்பு எப்படி தமிழக மக்களை மதிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.