இளைஞர்கள் அதிரடி… நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க இளைஞர்கள் ஒன்று திரண்டனர்.

இளைஞர்கள் அதிரடி… நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்.?

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க இளைஞர்கள் ஒன்று திரண்டனர்.

ஆரணி அடுத்த கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் தொடர் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனகூறப்படுகிறது. இதனால் பொருமை இழந்த அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மணல் திருட்டை தடுக்க நினைக்கும் இளைஞர்களுக்கு மணல் கடத்தல் காரர்கள் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். முன்னதாக மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி ஆற்று நீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.