என்னிடம் உங்கள் உருட்டலும் மிரட்டலும் வேலைக்காகாது... திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை!!
வெளியிடப்பட்டுள்ள ஊழல் பட்டியலின் அடிப்படையில் அடுத்த வார இறுதிக்குள் டெல்லி சென்று சிபிஐயில் வழக்கு பதிவு செய்ய உள்ளேன் இதை அப்படியே விடப்போவது இல்லை.
திருச்சி செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் உங்கள் மீது திமுகவைச் சார்ந்த உறுப்பினர்கள் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர் என கேள்வியெழுப்பியபோது ஊழல் செய்த பணத்தினை வழக்கறிஞர்களிடம் செலவு செய்ய வேண்டி இருப்பதால் வழக்கு தொடர்வார்கள் எனவும் எந்த பகுதியில் வழக்கு பதிவு செய்தாலும் அங்கு நான்கு மணி நேரம் எனக்கு கிடைத்தாலும் என் கட்சியை வளர்ப்பதற்காக பயன்படுத்துவேன் எனவும் பதிலளித்தார். மேலும் வழக்கு தொடர்ந்தாலும் அதற்கு நான் பயப்பட போவதில்லை எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நான் குற்றம் சாட்டிய நிறுவனங்கள் கம்பெனிகள் எதையும் திமுகவைச் சார்ந்த யாரும் என்னுடையது இல்லை என இதுவரையில் மறுப்பு தெரிவிக்கவில்லை எனக் கூறிய அவர் அது அவர்களுடையது இல்லை என்றால் மறுப்பு தெரிவிக்கட்டும் பட்டியல் வெளியிட்டு 24 மணி நேரம் முடிந்த நிலையில் இதுவரையில் யாரும் மறுப்பு தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இன்னும் பல ஆதாரங்களுடன் பட்டியல் வெளியிட தயாராக இருக்கின்றோம் எனவும் ஊழல் செய்த யாரும் தப்பி செல்ல முடியாது எனவும் கூறிய அண்ணாமலை என்னிடம் பூச்சாண்டி வேலை எல்லாம் காட்ட வேண்டாம் எனவும் இதையெல்லாம் ஒன்றும் தெரியாதவர் அரசியலுக்கு வந்தால் அவரிடம் சொல்லலாம் அவனை மிரட்டியும் உருட்டியும் பார்க்கலாம் எனவும் தெரிவித்த அவர் என்னிடம் உங்கள் உருட்டலும் மிரட்டலும் வேலைக்காகாது எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அண்ணாமலை நூறு வருடம் வாழப்போவதில்லை எனவும் இன்றோ நாளையோ மரணம் நம்மை தழுவுவது உறுதி எனவும் அதனால் எந்த அச்சுறுத்தல் வந்தாலும் நான் பயப்பட போவதில்லை எனவும் கூறினார்.
இதையும் படிக்க: அண்ணாமலையின் பொய்க் குற்றச்சாட்டுகளை திமுக எதிர்கொள்ளும்.....!!