ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்.. இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை...

சிறுமியை கடத்திய இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்.. இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை...

சேலத்தில் திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்திய இளைஞருக்கு 16 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் கிராமம் கூத்தனாரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அங்கமுத்து கடந்த 2018 ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதாக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான  அங்கமுத்து கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், சிறுமியை கடத்திச் சென்ற இளைஞர் அங்கமுத்துவுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.