தொழில்துறை அதிநவீன முறையில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

குறு, சிறு தொழில் துறையையும் அதிநவீன முறையில் மாற்றி அமைப்பதற்கான பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அதிநவீன முறையில் மாற்றி அமைப்பதற்கான பணிகள்  தமிழகத்தில் நடைபெற்று வருகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தொழில்துறை சார்பில் நடைபெறும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது சென்னை, தரமணி டைடல் பார்க்கில் உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையத்தை அவர் திறந்து வைத்தார். 212 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை அவர் திறந்து வைத்தார்.

மேலும் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் 77 கோடி ரூபாயில் அமையவுள்ள டைடல் பூங்காக்களுக்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் புத்தாக்க மையங்களை திறந்துவைத்தார்.

அப்போது பேசிய அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், உற்பத்தியில் தெற்காசியாவில் தமிழகம் சிறந்து விளங்குவதாகவும் தெரிவித்துள்ளார். தொழில்துறை மிக சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.