குடும்ப தகராறில் ரயில் இஞ்சின் முன் பாய்ந்து பெண் தற்கொலை..! சிதம்பரத்தில் நேர்ந்த சோகம்..!

குடும்ப தகராறு காரணமாக ரயில் இஞ்சின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு ரயில்வே போலீசார் விசாரணை....  

குடும்ப தகராறில் ரயில் இஞ்சின் முன் பாய்ந்து பெண் தற்கொலை..! சிதம்பரத்தில் நேர்ந்த சோகம்..!

சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்புராஜ், அவரது மனைவி ராதிகா. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு முற்றவே ராதிகா தனது தாய் வீடான வெங்காயதலைமேடு கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு ராதிகா தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

அதன்படி இன்று காலை வேலக்குடி பகுதியில் ரயில் தண்டவாளம் முன்பு நின்ற அவர்,  சீர்காழி பகுதியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த ரயில் இஞ்சின் முன்பு திடீரென பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதில் அவரது உடல் இரண்டு துண்டுகளாக பிரிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீஸ் ஆய்வாளர் அருண் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்துபோன ராதிகாவின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இருப்பினும் இறந்துபோன ராதிகாவிற்கு ஒரு ஆண் குழந்தை ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.