வீட்டை காணவில்லை என சாலையில் போராட்டம் நடத்திய விதவைப் பெண்...
மார்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என மூதாட்டியோடு விதவை பெண் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் அருகே புளியவாளாகம் பகுதியை சேர்ந்த லபிலாபள்ஸ். இவரதும மனைவி தெரசா. இவர் சென்னையில் ஓட்டுனராக பணியாற்றி வந்ததால், சென்னையில் தனது மகள் ஜெனிபர் உடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் லபிலாபன்ஸ் திடீரென மாரடைப்பால் உயிர் இழந்தார். கணவனை இழந்த தெரசா வறுமையால் வாடிய நிலையில், வாடகை கொடுக்க முடியாத காரணத்தால் சென்னையில் இருந்து வாடகை வீட்டை காலி செய்து உடைமைகளோடு சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு வந்த போது, லபிலாபன்ஸின் அண்ணன் முறை உறவினர் விஜயகுமார் வீட்டை இடித்து விட்டு அவர் வீடுகட்டும் பணியில் ஈடுபட்ட காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து வீட்டை காணவில்லை என்று கூறி உடைமைகளோடு தர்ணாவில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார், தாய் மற்றும் மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாங்கள் வேறு வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கிறோம் ஆகவே தீர்வு ஏற்படுத்த போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். போலீசார் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.