தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. இதைதொடர்ந்து தற்போது பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம், காக்களூர், ஈக்காடு, பெரியகுப்பம், மணவாளநகர், மற்றும் கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். 

இதே போல் செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம், ஆத்தூர், மகாலட்சுமி நகர், புலிப்பாக்கம், காந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.