ரஜினிக்கு ஒரு நியாயம்...விஜய்க்கு ஒரு நியாயமா? சீமான் கேள்வி!

நடிகர் விஜய் படத்திற்கு மட்டும் திமுக அரசு நெருக்கடி கொடுப்பது ஏன்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் விஜய் படத்திற்கு மட்டும் திமுக அரசு நெருக்கடி கொடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். ரஜினி படத்திற்கு ஒரு நியாயம், விஜய் படத்திற்கு ஒரு நியாயமா? என்றும் சீமான் ஆவேசத்துடன் கூறினார். 

இதையும் படிக்க : பகையால் நேர்ந்த விபரீதம்...குற்றவாளிகளை கைது செய்த போலீசார்!

தொடர்ந்து பேசிய சீமான், நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் என்றும், பிறகு நின்றுவிடும் என்றும் விமர்சித்தார்.