தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு? - தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வருடன் கலந்தாலோசிக்கப்படும் - விசிக கட்சி தலைவர் திருமாவளவன்

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சி  பெறுவது குறித்து தேர்தல் முடிவுக்குப் பிறகு முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி யாருக்கு? - தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வருடன் கலந்தாலோசிக்கப்படும் - விசிக கட்சி தலைவர் திருமாவளவன்

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் திமுக கூட்டணியே கைப்பற்றும் என தெரிவித்தார். .  

மேலும் தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்  தேர்தல் முடிவுக்கு பின்பு மேயர் பதவி குறித்து முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு  செய்யப்படும் எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.