எங்கடா இங்க இருந்த ஓபிஎஸ் படத்தை காணோம்! போச்சா! இரட்டை இலை தனியாக இருக்கும் பேனரால் பரபரப்பு!!
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனரில் ஓ. பன்னீர்செல்வம் படத்தை மறைத்து இரட்டை இலை ஒட்டிய அதிமுகவினர்.
தமிழகத்தில் தற்பொழுது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான சுந்தரராஜன் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சங்ககிரி சட்டமன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் புகைப்படத்துடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் அதிமுகவினர்யிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவருதை தொடர்ந்து சங்ககிரி சட்டமன்ற அலுவலகம் முன்பு வைக்கப்பட்டியிருந்த பிளக்ஸ் பேனரில் ஓ. பன்னீர்செல்வத்தின் படத்தை மறைத்து இரட்டை இலை சின்னத்தை ஒட்டி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் ஒட்டியுள்ளனர்.. இது ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் பரப்ரபை ஏற்படுத்தியுள்ளது.