தமிழ் வழி கல்வி குறித்து பாடல் பாடி மாணவர்களை வரவேற்ற தலைமையாசிரியர்...!

அம்மையநாயக்கனூர் தொடக்கப்பள்ளியில் சேர்க்கைக்கு வந்த மாணவர்களை அப்பள்ளி தலைமையாசிரியர் பாடல் பாடி வரவேற்றார்.

தமிழ் வழி கல்வி குறித்து பாடல் பாடி மாணவர்களை வரவேற்ற தலைமையாசிரியர்...!

திண்டுக்கல் மாவட்டம்  கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் தொடக்கப்பள்ளியில் இன்று பள்ளி திறப்பையொட்டி, மாணவர்கள் சேர்க்கைக்கு அதிகளவில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.

இந்தநிலையில், அப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் முதலாவதாக சேர்க்கைக்கு வந்த மாணவனுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

இதனிடையில், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து பாடலாக பாடி, மாணவர்களை தலைமையாசிரியர் வரவேற்ற விதம் பெற்றோர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.