புரட்சித்தலைவரின் வாரிசுகள் நாம் என்று நிரூபிப்போம்....துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம் ...சசிகலா சூளூரை

புரட்சித்தலைவரின் வாரிசுகள் நாம் என்று நிரூபிப்போம் என்றும், துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம் என்று சசிகலா சூளுரைத்தார்.

புரட்சித்தலைவரின் வாரிசுகள் நாம் என்று நிரூபிப்போம்....துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம் ...சசிகலா சூளூரை

எம்.ஜி.ஆர் 34வது நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு வி.கே. சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுகவின் நிறுவனத் தலைவரும் மறைந்த முதலமைச்சருமான எம்ஜிஆரின் 34வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., திருவுருவப்படத்திற்கு வி.கே. சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் முன்னிலையில், எம்.ஜி.ஆர்., நினைவு தின உறுதி மொழியையும் சசிகலா ஏற்று கொண்டார். 

அதன்படி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கற்றுக் கொடுத்த பாடங்களை எந்நாளும் மறக்காமல், அதே நெறிமுறைகளை பின்பற்றி, தன்னலமின்றி செயலாற்றி, எதிரிகளின் சூழ்ச்சிகளை வென்று விடுவோம் என்று கூறினார்.

மேலும் எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் தங்கள் உயிர் மோசமூச்சாக எண்ணி, தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கோடான கோடி தொண்டர்களின் எண்ணம் ஈடேறும் வகையில் கழகம் மீண்டும் தலை நிமிரவும் ஒன்றுபடுவோம் என்று கூறியும்,

வருங்காலங்களில் உள்ளாட்சி மன்றம் முதல், நாடாளுமன்றம் வரை கழகத்தினர் பல்வேறு பதவிகளில் அமர்ந்திட, தனது தலைமையில் கழகத்தை வெற்றி பாதையில் இட்டுச் செல்ல ஒன்றுபடுவோம் என்றார்.

அதேபோல் புரட்சித்தலைவரின் வாரிசுகள் நாம் என்று நிரூபிப்போம் என்றும், துரோகங்களை வேரறுத்து வென்று காட்டுவோம் என்றும் சூளுரைத்துக் கொண்டார் சசிகலா.