ராகவன் வீடியோ நிறைய பார்த்துட்டோம்... அப்பாவி பெண்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு... நடிகை கஸ்தூரி வேதனை...

அப்பாவி பெண்களின் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது என்று கஸ்தூரி வேதனை தெரிவித்துள்ளார்.

ராகவன் வீடியோ நிறைய பார்த்துட்டோம்... அப்பாவி பெண்களை நினைத்தால்தான் பாவமா இருக்கு... நடிகை கஸ்தூரி வேதனை...

பாஜக கட்சியில் மிக முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து பாலியல் புகார்கள் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பாஜக-வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கே.டி ராகவன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த அவர், பெண்களிடம் பொதுவாக பேசும் போதே வரிங்களா என கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.

 அதிலும் சமீபத்தில் வீடியோ கால் மூலம் பாஜகவை சேர்ந்த ஒரு பெண் நிர்வாகியிடம் பேசும் போது ஆபாசமாக சைகைகாட்டி பேசியுள்ளார். தொடர்ந்து சுய இன்பத்தில் ஈடுபட்டதையும் வீடியோவில் காட்டியதால் பதறிப்போன அந்த பெண் செல்போனை தூக்கி எரிந்ததாகவும் கூறப்படுகிறது. கே.டி ராகவன் இப்படி கீழ்தரமாக பேசுவதும் நடந்துகொள்ளும் வீடியோ சமூகவலைதளங்களில் காட்டு தீயால் பரவி வருகிறது.

ராகவனுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களும், கண்டனங்களும் தொடர்ந்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரியும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "இத்தனை நாளு ஒரு TV debate கூட முழுசா பாக்கல. இன்னிக்கு சேர்த்து வச்சு எக்கச்சக்கமா பாத்துட்டோம்! தம்பதி சமேதரா ஒரு interview இப்போ வைரல்... அதுக்கு கமெண்ட்ஸ் தெரிச்சுக்கிட்டு இருக்கு. இந்த கண்ராவியில் சிக்கி பொதுவெளியில் விவாதிக்கப்படும் அப்பாவி பெண்களை நினைத்தால்..." என்று பதிவிட்டுள்ளார்.