அதிமுக ஆட்சியில் ஊழல் மிகுந்த பதிவுத்துறையை சீரமைத்துள்ளோம்,.! -அமைச்சர் மூர்த்தி பெருமிதம்.! 

அதிமுக ஆட்சியில் ஊழல் மிகுந்த பதிவுத்துறையை சீரமைத்துள்ளோம்,.! -அமைச்சர் மூர்த்தி பெருமிதம்.! 

தமிழகத்திலேயே ஊழல் மிகுந்தது பதிவுத்துறை' என்ற பெயரை மாற்றியுள்ளோம் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 

மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்மாற்றி, ஆழ்துளை கிணறு உள்ளிட்டவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்து பற்றி கேள்வியெழுப்பப் பட்டது  அதற்கு பதிலளித்த அவர், சட்டமன்ற தேர்தலின் போது கருவாடு மீனாகாது என்று சொன்னவர்கள் அவர்கள். ஆனால், இப்போது நடந்ததே வேறு. அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் 34000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது, மின்சார துறையில் பல்வேறு குளறுபடிகள் இருக்கிறது, தமிழகத்தில் ஊழல் மிகுந்த துறையாக இருந்த பதிவுத்துறையை, அதிரடியான முடிவுகள் எடுத்து சீரமைத்து வருகிறோம் எனத் தெரிவித்தார். 

மேலும், நிர்வாகத் திறமையற்ற அதிமுக அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை கூட வைக்கவில்லை. நாங்கள் அதற்கான பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். மக்கள் செல்வாக்கு எங்களுக்கே உள்ளது என்பதற்கு சான்று தான் இப்போதைய ஆட்சி. இனி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதுவே நடக்கும். 2019-20 ஆண்டில் வேலூரில் போலி பத்திர முறைகேடு நடைபெற்றுள்ளது. அது போன்ற செயல்கள் இனி நடைபெற கூடாது என்ற காரணத்தினால் பதிவுத்துறையில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.