மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு..!

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர் சரிவு..!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. 

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு நேராக வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 166 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று 3 ஆயிரத்து 37 கன அடியாக குறைந்துள்ளது. 

அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் மீண்டும் சரிய தொடங்கி உள்ளது.  

நேற்று 117.82 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் 117.20 கன  அடியாக குறைந்துள்ளது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.